Saturday, January 31, 2009
கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது!
முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல்
கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்
தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்
புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்!
உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்!
நுகராமலும்
சூடாமலும்
இருக்கும்
ஒரு மலர் போல்!!
உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!!
எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment