Sunday, March 1, 2009

இந்தியா அமெரிக்காவை முந்தியது!!

 

இந்தியா அமெரிக்காவை செலவினத்தில் விஞ்சியது!!!

ஆமாங்க!!! உண்மைதான்!!! நம்புங்க!!!

எந்த செலவுல முந்தி இருக்கு என்று கேட்கிறீர்களா?

வேற எந்த செலவுல!!! தேர்தல் செலவில்தாங்க!

எவ்வளவுன்னு நெனைக்கிறீங்க?

ரூ. 10,000 கோடி?

இந்தியாவில் விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம், மத்திய-மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தத்தொகை பாரக் ஒபாமாவும் ,ஏனைய அரசியல்வாதிகளும் நடந்து முடிந்த தேர்தலில் செலவிட்ட தொகை 8000 கோடியை விட அதிகம்!

8000 கோடிதான் அமெரிக்கவரலாற்றின் அதிகபட்சம்!

அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஓராண்டு செலவுத்தொகையைவிட நான் ஒரு சில மாதத்தேர்தலுக்கு செலவிடும் தொகை அதிகம்!இதுவும் ஆந்திரா,ஒரிசாவைத் தவிர்த்தாம்!

 

இந்தியாதான் தேர்தலுக்கு உலகத்திலேயே அதிகம் செலவு செய்யும் நாடாக இருக்கும்!

இது கடந்த 1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த முதலீட்டு அளவாகும் என்று சொல்கிறார்கள்!

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக்காடு அளவுக்கு நாட்டின் நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் இந்தப் பணம் செலவிடப்பட வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில், மிகப்பெரிய தொகையை தேர்தலுக்காக செலவிடுவதால், மேலும் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொகையில் 20 விழுக்காடு அதாவது ஆயிரத்து 300 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு ஆகும் செலவாகும். அதாவது தேர்தல் ஆணையத்தின் செலவு தொகை.

எஞ்சிய தொகை முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படக் கூடியது என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிதியாண்டின் 3ஆவது காலாண்டு இறுதியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.3 விழுக்காடாக உள்ளது. இது மிகவும் குறைந்த விகிதமாகும்.
சுமார் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணமாகமோ அல்லது சட்டவிரோதமாகவோ அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதில் ஆந்திராவும், கர்நாடகமும் முதலிடம் வகிக்கின்றன.
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்த 50 விழுக்காடு வாக்காளர்கள் வாக்கிற்குப் பணம் என்ற அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் ஆணையம் தவிர, மாநில அரசுகள் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கான செலவு ரூ. 1,650 கோடி என்று தெரிய வந்துள்ளது.

Saturday, February 28, 2009

மரணம் நேரடி ஒளிபரப்பு!

 

 

 

சில்பா செட்டியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்

கலந்து கொண்டு நிகழ்ச்சியின்போது இனவெறியுடன்

நடந்து கொண்ட நடிகை ஜேட் கூடி நேற்று ஜேக்

ட்வீட் என்ற வாலிபரைத் திருமணம் செய்து

கொண்டார்!

 

அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற ஜேக்

முன் வந்தார். அதன்படி, எஸ்ஸெக்ஸ் என்ற இடத்தில்

உள்ள டவுன் ஹால் என்ற ஓட்டலில் வைத்து

இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.

 

ஏன் கடைசி ஆசை என்கிறீர்களா? சில்பாவுடன்

சர்ச்சை ஓய்ந்த நிலையில் ஜேட் கூடிக்கு   கர்ப்பப்பை

வாய் புற்றுநோய் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று

வருகிறார்.

 

கர்ப்பப்பை புற்றுநோய்க்காக   லண்டன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு

கீமோ தெரபி' சிகிச்சை அளித்ததால் தலையில்

மொட்டை அடிக்கப்பட்டது

 

அவருக்கு புற்று நோயானது தற்போது

குடல்,கல்லீரல்,மற்றும் அதைச் சுற்றியுள்ள வயிற்றின்

சுவர்களிலும் பரவியுள்ளது!!

 

ஜேட் கூடியின் உயிருக்கு டாக்டர்கள் இன்னும் சில

வாரங்களே கெடு விதித்துள்ளனர்! 

 

திருமணத்தை முன்னிட்டு தனி ஹெலிகாப்டர்

மூலமாக நேற்று முன்தினமே ஜேட் கூடி ஓட்டலுக்கு

வந்து சேர்ந்தார். மணமகன் ஜேக், தனது இல்லத்தில்

இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரில் புறப்பட்டு நேற்று

காலை 10 மணிக்கு ஓட்டலுக்கு வந்தார். அதன் பிறகு,

45 நிமிட நேரம் திருமண சடங்குகள் நடைபெற்றன

 

இன்னும் சில வாரங்களில் இறக்கப்போகும் ஜேட்

கூடியின் திருமணம் மகிழ்ச்சியும் சோகமும்

இழையோட நடந்து முடிந்தது. மணமகன் ஜேக், ஒரு

அடிதடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது

குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் தான்

அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது

 

எனினும், 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே

செல்ல கூடாது, எஸ்ஸெக்சில் உள்ள ஒரே

முகவரியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது

உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சில வாரங்களுக்கு முன்

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது புது மனைவியுடன் முதலிரவு

நடத்துவதற்காக 7 மணிக்கு மேல் வீட்டில் இருக்க

வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் ஒரு நாளுக்கு

தளர்த்தப்பட்டு உள்ளது.

 

என் வாழ்நாளில் அதிகநேரம் நான் டி.வி. சினிமாவில்

கழித்துள்ளேன்  என் இறப்பையும் நேரடி ஒளிபரப்பு

செய்யவேண்டும்என்று விரும்புகிறேன் என்று

கூறுகிறார்.இதன் மூலம் இளம் வயதினருக்கு இந்த

வியாதியுடன் மன உறுதியுடன் வாழ்வதைப் பற்றி

நேரடியாக தெரிந்து கொள்ளட்டும் என்கிறார்..

 

27 வயதே ஆன அவருக்கு பாபி(5

வயது),ஃப்ரெடி(4 வயது) என்ற இரு குழந்தைகள்

உள்ளனர்.

என்ன மரணத்தை நேரடியாகப் பார்ப்பது சரியா? தப்பா? 

 

 

 

 

ஸ்லம்டாக் அசாருக்கு அறை!

 

 

 

ஊருக்கு ராசான்னாலும் அப்பனுக்குப் பிள்ளைதானே?

என்னங்க நான் சொல்றது!!!

”ஸ்லம் டாக்”ல நீ பரிசுவாங்கினா அப்பன் நான் விட்டுறுவேனா உன்னைய!!”

அப்படி கதை ஆயிப்போச்சு அசாருக்கு!

விசயம் என்னன்னா ஸ்லம்டாகில் நடித்த தம்பிஅசாருக்கு 10

வயசுதான் ஆகுது!!

நம்ம ஜூனியர்கள் பேச்சு கேக்கவா வேணும்!

 

பேட்டி தரும்போது பார்த்து

இருப்பீங்க! “அமித்தாப்பச்சன் கூட அங்கே

போனதில்லியாம்னு “ தொண்டை கிழியக்கத்துறான்

டி.வி.யில்! ( எவனோ சின்னப்பையன் கிட்ட

எவனோ அரசியலைத் திணித்து

இருக்கான் பாருங்க!)

 

அமித்தாப் கூட

அங்கே போனதில்லை! நாங்கள் போய் வந்து

விட்டொம்னு நிச்சயம் அவனுக்குத்தெரிந்து இருக்காது!

இப்படி டி.வி.யில் சொல்லுன்னு எவனோ ட்ரைனிங்

குடுத்து இருக்கான்!! பய புள்ள அப்படியே டி.வி.ல

சொல்றான்! நல்லது!

இருந்தாலும் நல்ல மீடியா மக்கள் தொடர்ந்து

தொல்லை தருகிறார்களே! அசந்து தூங்குவோம்னு

போயி படுத்து இருக்கான்!!

 

நம்மாளுங்கதான் தூங்கினாலும் விடமாட்டான்களே!!

 

மீடியா கோஷ்டி அசார் அப்பாவை நெருக்க, அவர்

போய் பொடியனை எழுப்பி இருக்கார்!! பையன் செம

டையர்ட்!!! ”ரெஸ்ட் எடுக்கிறேன் அப்பா” என்று

சொல்ல ,அப்பாவுக்கு வந்ததே கோபம்!!

 

ரெஸ்டாவது மண்ணாங்கட்டியாவது இந்த நேரத்தில்

தூங்கினா என்ன ஆவது? காத்தடிக்கும் போதே

தூத்திக்கணுமே! ன்னு விட்டார் ஒரு அறை!!!

 

ஆஸ்காராவது! கீஸ்காராவது ? எந்திரி மொதல்லேன்னு

செல்லமா ஒரு அறை விட்டு எழுப்பிட்டார்!

பையனும் சமாளிச்சு எந்திரிச்சுட்டான்!!!

 

எனக்கு அப்பா அடித்ததில் கோபமில்லைன்னு ஒரு

பேட்டியும் கொடுத்து விட்டான்!!!

அடித்தாலும், பிடித்தாலும் அப்பனும் மவனும் ஒன்னு

சேந்துப்பானுவ..!

நம்ம வேலையப்பாப்பம் வாங்க!

.நமக்கு இதுதானே வேலையேங்கிறீகளா? சரி அடுத்த

அடுத்தவன் கதையைப்பாப்போம்!

”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா?-டானி பாய்ல்!

Film still for Mumbai rising

டானி பாய்ல் , ஸ்லம் டாக் படத்தின்

இயக்குனருக்கு

நான் ஸ்லம் டாக் வெட்கக்கேடு என்று எழுதிய

பதிவு தெரிந்து விட்டது!!!

 

அவர் மும்பாய் வாழ் குடிசை சிறுவர்களை

வறுமையிலிருந்து வெளிக்கொணர ஒரு நிதியமைப்பு

ஏற்பாடு செய்கிறார்!!

 

இதற்காக அடுத்தவாரம் லண்டனில்

இதில் ஆர்வமுள்ளவர்களின் கூட்டம்

ஒன்றைக்கூட்டியிருக்கிறார்..அதில் பணம் எவ்வளவு

போடுவது, எப்படி அதை சரியான

முறையில் வீணாகாமல் உபயோகிப்பது போன்ற

விசயங்கள் தீர்மானிப்பார்கள்!

கீழே அவர் சொன்ன முத்தான பாராட்டத்தக்க வரிகள்! 

"We want to set it up as soon as possible. What absolutely mustn't happen is that the money disappears or people think this is a PR stunt," Boyle said.

 

பாயிலும் கோல்சனும்(தயாரிப்பாளர்களில் ஒருவர்)

ஏழைச் சிறுவர்களைப் பயன்படுத்தி படம் எடுத்து

பணம் சம்பாரிக்கிறார்கள் என்ற குரல்கள் பல

பக்கங்களிலிருந்தும் எழுந்ததையொட்டி தங்களின்

இந்த திட்டத்தை வெளியிட்டனர்!

டைம் பத்திரிக்கையும் இவர்களை

மேற்சொன்னதுபோல் விமரிசித்து இருந்தது!

 

ஆயினும் இந்த விமரிசனங்களால் தாங்கள் இந்த

முடிவு எடுக்கவில்லை என்றும் இந்தப்படத்தின் அபார

வெற்றியில் கிடைத்த அதிகமான பணத்தில் இந்த

மிகச் சிறந்த நகருக்கு ஏதாவது செய்யவேண்டும்

என்ற எண்ணமே காரணம் என்றும் மனம் நெகிழ்ந்து

கூறியுள்ளார்.

 

தங்க க்ளோப் விருது பெற்றவுடனே தாங்கள் இந்த

முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்..

 

ஒரு (இளைஞர்) நடிகர்களுக்குக் கொடுப்பது போல்

மூன்று மடங்கு வருடச்சம்பளம் அசாருக்கும்,

ரூபினாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது!என்றார்!!

 

அதாவது ஒரு மாதம் நடித்ததற்கு ஒரு வருட

சம்பளம் தரப்பட்டு உள்ளதாம்!

 

ஆச்சரியம்தான்!!

 

இதன் பிறகு அவர்களுக்கு 18 வயது ஆகும்

போது,பள்ளிப்படிப்பை முடித்தால் அவர்களுக்கு பெரிய

தொகை கிடைப்பது போன்ற தனி ஏற்பாடும்

செய்வதாகக் கூறியுள்ளார்!!!

 

இந்த அருமையான 

மனிதனை  தலைதாழ்த்தி

வணங்குகிறேன்.

Friday, February 27, 2009

உயிருடன் புதைப்பு?

 

பங்களாதேசத்தில் மொத்தம் ஐம்பத்து ஒரு

பங்களாதேச ரைபில்ஸ் படைப்பிரிவைச்சேர்ந்த உயர்

அதிகாரிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு

உள்ளன.

மேலும் 100

உயர் அதிகாரிகளின் விபரங்கள் தெரியவில்லை.இந்த

உடல்கள்  பங்களாதேச ரைஃபில்ஸ் தலைமையக

வளாகத்தில் ஒரு குழியில் மொத்த உடல்களையும்

போட்டு மூடியிருந்ததை இராணுவ அதிகாரிகள்

தோண்டி எடுத்தனர்!சில அதிகாரிகள் குற்றுயிரும்

குலைஉயிருமாக உயிருடன் புதைக்கப்பட்டு

இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது!!

இந்த சம்பவம் அதிர்ச்சிகரமானது என்று பிரதமர்

ஹசீனா கூறியுள்ளார்.

     முன்னர்,    பங்களாதேசத்தில்பில்கானாடாக்காவில்

எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், உயர்

அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் திடீரென

கலவரத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர்

இதில்அந்த பிரிவின் உயர் அதிகாரி டைரக்டர்

ஜெனரல் சுடப்பட்டு இறந்தார். மேலும் பல

அதிகாரிகளும் இறந்தனர்!

அது தற்போது அந்த நாட்டு இராணுவத்தால்

கட்டுப்படுத்தப்பட்டது!!

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் தற்போது

சரணடைந்துவிட்டனர்.

 

.

இறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்!!!

 

ரஹ்மானுக்குக் கோபமா?

         இந்தியாவுக்குப்பெருமை சேர்த்த ஆஸ்கார்

நாயகன் இந்தியா வந்து சேர்ந்தார்.சென்னையில்பிரஸ்

மீட் ஹாலுக்கு வந்த அவரைச் சுமார் 50 போட்டோ

கிராபர்களுக்கு மேல் சூழ்ந்துகொண்டார்கள்.

கிட்டத்தட்ட 20 நிமிடம் அவரை மாற்றி மாற்றிப் படம் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். 

"நான் இங்கேதான் இருப்பேன். எங்கேயும் ஓடிட மாட்டேன். மும்பை போட்டோ கிராபர்கள் மாதிரி செட் செட்டா எடுத்துக்கொள்ளுங்களேன்" என்று ரஹ்மான் கேட்டுக்கொண்டும் ஒருவரும் காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர், "அப்படின்னா நான் கிளம்புறேன்" என்று மூன்று முறை செல்லக் கோபம் காட்டினார். ம்ஹும், அதற்கும் சளைத்தால்தானே? வேறு வழியில்லாமல் அவர்களின் போக்குக்கே விட்டுவிட்டார்.

ஒரு வழியாக அவர்கள் அவரை விட்டு விலகியதும்தான் பிரஸ் மீட் துவங்கியது. கேள்வி கேட்கவும் நிருபர்கள் ஒருவரை ஒருவர் முண்டிக்கொண்டார்கள். 

இரண்டு பகுதிகளாக நடைபெற்ற பிரஸ் மீட்டில், முதலில் நடந்த பிரிண்ட் மீடியா பிரஸ் மீட்டில்தான் இந்தக் களேபரம். இரண்டாவதாக நடந்த எலக்ட்ரானிக் மீடியா பிரஸ் மீட்டில் ஒரு களேபரமும் இல்லை.

"இங்கே ரொம்ப டீசன்ட்டா இருக்கே?" என்று கமெண்ட் அடித்துக்கொண்டே சீட்டில் அமர்ந்தார் ரஹ்மான். எல்லாக் கேள்விகளுக்கும் சரமாரியான ஜாலி மூடில் பதிலளித்துக்கொண்டிருந்தவர், உங்களுக்கு எம்பி பதவி கொடுக்கப் போறதா ஒரு பேச்சிருக்கே என்று கேட்டதற்கு "ஐயய்யோ, வேண்டாம்" என்று பதறினார்.

 

 

மரணத்திற்கு பின் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது

 

ஹீத் லெட்ஜர்

அதிக அளவு போதையில் இறந்தவருக்கு ஆஸ்கார் விருது!!

தி டார்க் நைட் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்ற ஹீத் லெட்ஜருக்கு ஆஸ்கர் விருது அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.

லெட்ஜருக்கு அளிக்கப்பட்ட விருதை அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

டிசி காமிக்ஸ்-ன் பேட்மேன் தொடரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் தி டார்க் நைட்.

இந்தப் படத்தில் ஹீத் லெட்ஜர் கிலௌன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம், போதை மருந்தை அதிக அளவில் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் மரணம் அடைந்தார்.

எனினும் அவரது நடிப்பை போற்றும் வகையில் சிறந்த துணை நடிகருக்கான விருது ஹீத் லெட்ஜரின் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
இது ஹீத் லெட்ஜரின் சாதனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்று அவரது தந்தை கிம் லெட்ஜர் தெரிவித்தார்...

மும்பை தாக்குதல்-இந்தியர் உதவி!!

ஃபாஹிம் அன்சாரி,சஹாபுதீன் ஆகிய இரண்டு இந்தியர்களின் உதவியுடந்தான் மும்பை தாக்குதல் நட்ந்து உள்ளது!!!

இவர்கள் இருவரும் சி.பி.ஆர்.எஃஃப் முகாமின் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைதுசெய்யப்பட்டவர்கள்!

மு‌ம்பையை சுமா‌ர் 59 ம‌ணி நேர‌ம் செய‌லிழ‌க்க‌ச்செ‌ய்த குண்டு வெடிப்புகளில் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள 46 பே‌‌‌ரி‌ல், அ‌ஜ்ம‌ல் அ‌மீ‌ர்கசா‌ப், ஃபாஹ‌ி‌ம் அ‌ன்சா‌ரி, சபாபு‌தீ‌ன் அஹமதுஆ‌கிய மூ‌ன்று பே‌ர் மு‌ம்பை மாநகர‌க்காவ‌ல்துறை‌யி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌க்காவ‌லி‌ல் உ‌ள்ளன‌ர்.

மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌‌லி‌ன்போதுபாதுகா‌ப்பு‌ப் படை‌யினருட‌ன் நட‌ந்த து‌ப்பா‌க்‌கி‌ச்சண்டையில் 9 பய‌ங்கரவா‌திக‌ள்கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌வி‌ட்டன‌ர். இத‌ன் மு‌க்‌கிய‌ச்ச‌திகார‌ரு‌ம் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ப் ப‌யி‌ற்‌சிஅ‌ளி‌த்தவருமான லா‌க்‌வி உ‌ள்‌ளி‌ட்ட மேலு‌ம் 35 பே‌‌ர்தேட‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

ஹ‌பீ‌ஸ் சையது, அபு அ‌ல் காமா, ஜரா‌ர் ஷா,காஃபா, யூசு‌ப் எ‌ன்ற முஜா‌மி‌ஜ், அபு ஹ‌ம்ஜா,ஹமா‌த் அ‌மீ‌ன் சா‌தி‌க், ஜாவெ‌த் இ‌க்பா‌ல்,எ‌ம்.டி. ‌ரியா‌ஸ் ஆ‌கிய பய‌ங்கரவா‌திக‌ள் ‌தீ‌விரமாக‌த் தேட‌ப்படு‌கி‌ன்றன‌ர். இவ‌ர்க‌ள்பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பது‌ங்‌கியு‌ள்ளன‌ர் எ‌ன்பதுகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கு‌ற்ற‌ப் ப‌த்‌தி‌ரிகையை‌த் தா‌க்க‌ல் செ‌ய்த‌ பிறகு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு வெ‌ளி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச்ச‌ந்‌தி‌த்த ‌சிற‌ப்பு அரசு வழ‌க்க‌றிஞ‌ர் உ‌‌ஜ்வா‌ல் ‌நிகா‌ம், "வழ‌க்கு ‌விசாரணையை ஆறுமாத‌‌‌ங்களு‌க்கு‌ள் முடி‌க்க முய‌ற்‌சி‌ப்போ‌ம்." எ‌ன்றா‌‌ர்.

ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ள், காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள்ஆ‌கியோ‌ர் உ‌ள்‌ளி‌ட்ட 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட சா‌ட்‌சிக‌ள்கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரிகை‌யி‌ல் ப‌‌ட்டிய‌லி‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, அ‌ன்சா‌ரி சா‌ர்‌பி‌ல் வா‌தி‌ட்ட வழ‌க்க‌றிஞ‌ர் இஜாஸ் நா‌க்‌வி, தனது க‌ட்‌சி‌க்காரரைஅமெ‌ரி‌க்கா‌வி‌ன் உ‌ள் புலனா‌ய்வு அமை‌ப்பானஎஃ‌ப்.‌பி.ஐ. அ‌திகா‌ரி கு‌று‌க்கு ‌விசாரணை செ‌ய்யஅனும‌தி‌க்க‌க் கூடாது எ‌ன்று கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.எ‌ன்ன அடி‌ப்படை‌யி‌ல் எ‌ஃப்.‌பி.ஐ.‌க்கு அனும‌திதர‌ப்ப‌ட்டது எ‌ன்று‌ம் அவ‌ர் கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

.
பய‌ங்கரவாத‌த் தா‌‌க்குத‌ல்க‌‌ள் தொட‌ர்பாக அ‌ப்போது ‌பிடிப‌ட்ட ஒரே பய‌ங்கரவா‌தியான அ‌ஜ்ம‌ல்கசா‌ப்‌பி‌ற்கு எ‌திராக 12 வழ‌க்குகளை கு‌ற்ற‌ப்‌ பி‌ரிவுகாவ‌ல்துறை‌யின‌ர் ப‌திவு செ‌ய்தன‌ர்.

இ‌ந்‌தியத‌ண்டனைச் ச‌ட்ட‌த்‌தி‌ல் கொலை, கொலைமுய‌ற்‌சி, ‌திரு‌ட்டு, நா‌ட்டி‌ற்கு எ‌திராக‌ப் போ‌ர்தொடு‌த்த‌ல் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ‌பி‌ரிவுக‌ளிலு‌ம்,கு‌ற்ற நடைமுறை‌ச் ச‌ட்ட‌ம், ஆயுத‌ங்க‌ள்,வெடிபொரு‌ட்க‌ள் ச‌ட்ட‌ம் உ‌ள்‌ளி‌ட்ட வேறுபலச‌ட்ட‌ங்க‌ளிலு‌ம் அ‌ஜ்ம‌ல் ‌மீது வழ‌க்குக‌ள் ப‌திவுசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

பய‌ங்கரவா‌திக‌ள் கட‌ல் வ‌ழியாக வ‌ந்து இற‌ங்‌கியதுமுத‌ல் நா‌ரிம‌ன் இ‌ல்ல‌ம், தா‌ஜ், டிரைட‌ன்‌ட்ந‌ட்ச‌த்‌திர ‌விடு‌திக‌ள், கேஃ‌ப் ‌லியோபோ‌ல்‌ட், ச‌த்ரப‌தி ‌சிவா‌‌ஜி இர‌யி‌ல் ‌நிலைய‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறுஇட‌ங்க‌ளி‌ல் அவ‌ர்க‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌ல்க‌ள் வரைநே‌ரி‌ல் பா‌ர்‌த்த சா‌‌ட்‌சிக‌ள், ‌விசாரணை நட‌த்‌தியப‌ல்வேறு புலனா‌ய்வு அமை‌ப்புக‌ள் ஆ‌கியோ‌‌ர்தெ‌ரி‌வி‌த்த கரு‌த்து‌க்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் கு‌ற்ற‌ப்‌ ப‌த்‌தி‌ரிகை தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் தா‌ன் ப‌யி‌ற்‌சி பெ‌ற்றது முத‌ல்மு‌ம்பை‌யி‌ல் கட‌ந்த ஆ‌‌ண்டு நவ‌ம்ப‌ர் 26ஆ‌ம்தே‌தி காவ‌ல்துறை‌யா‌ல் தா‌‌ன் கைதுசெ‌ய்ய‌ப்ப‌ட்டது வரை தனது பயண‌ம் கு‌றி‌த்துஅ‌ஜ்ம‌ல் கசா‌ப் அ‌ளி‌த்து‌ள்ள ஒ‌ப்புத‌ல்வா‌க்குமூலமு‌ம் கு‌ற்ற‌ப் ப‌த்‌தி‌‌ரிகை‌யுடன்இணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஃபாஹ‌ி‌‌ம் அ‌ன்சா‌ரி‌யிட‌ம் பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல்வரைபட‌ம் தயா‌ரி‌க்க‌‌ச் சொ‌ன்ன சஹாபு‌தீ‌ன்அஹமது, கு‌ற்ற‌ப் ‌பி‌ரிவு காவல‌ர்க‌ளிட‌ம்அ‌ண்மை‌யி‌ல் அ‌ளி‌த்து‌ள்ள 40 ப‌க்க ஒ‌ப்புத‌ல்வா‌க்குமூல‌த்‌தி‌ல், பா‌கி‌ஸ்தா‌ன் உயர‌திகா‌ரி க‌ர்ன‌‌ல்கயா‌னியை‌த் தா‌ன் ச‌ந்‌தி‌த்து ஆலோசனைகளைப்பெ‌ற்றதை ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இதுவு‌ம் கு‌ற்ற‌ப்‌ ப‌த்‌தி‌ரிகை‌யி‌ல் இணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
ரா‌ம்பூ‌ரி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படைமுகா‌மி‌ன் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட தா‌க்குத‌ல் தொட‌ர்பாககட‌ந்த ஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி மாத‌ம் ஃபாஹ‌ி‌ம்அ‌ன்சா‌ரியை உ‌த்தர‌ப்‌பிரதேச‌க் காவ‌ல்துறை‌யின‌ர்கைது செ‌ய்தன‌ர்.

இவ‌‌ரிட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌யி‌ல், தன‌க்கு 26/11 தா‌க்குத‌‌லி‌ல்பங்‌கிரு‌ப்பதை ஒ‌ப்பு‌க்கொ‌‌‌ண்டா‌ர்.
சஹாபு‌தீ‌ன் அஹமது கூ‌றியத‌ன் பே‌ரி‌ல்,மு‌ம்பை‌யி‌ல் உ‌ள்ள ந‌ட்ச‌த்‌திர வ‌ிடு‌திக‌ள், ச‌த்ரப‌தி ‌சிவா‌ஜி இர‌‌யி‌ல் ‌நிலைய‌ம் உ‌ள்‌ளி‌ட்ட இல‌க்குகளைதானே தனது கை‌யினா‌ல் வரை‌ந்து கொடு‌த்ததாக ‌விசாரணை அ‌திகா‌ரிக‌ளிட‌ம் ஃபாஹ‌ி‌ம்கூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்த அ‌க்டோப‌ர் 2004 முத‌ல் அ‌க்டோப‌ர் 2007வரை பா‌கி‌ஸ்தா‌ன் உளவு அமை‌ப்பான ஐ.எ‌ஸ்.ஐ.இ‌ன் தலைவராகவு‌ம், த‌‌ற்போது பா‌கி‌ஸ்தா‌ன்இராணுவ‌த் தளப‌தியாகவு‌ம் உ‌ள்ள ஜெனர‌ல்ப‌ர்வே‌ஷ் அ‌‌ஷ்ஃபா‌க் கயா‌னியை தா‌ன் ச‌ந்‌தி‌த்ததாகசஹாபு‌தீ‌ன் அஹமது ஒ‌ப்பு‌க்கொ‌‌ண்டு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 2002இ‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் இராணுவநடவடி‌க்கைக‌‌ளி‌ன் தலைமை இய‌க்குநராக இரு‌ந்தகயா‌னி, மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌ற்கு‌ப் ‌பி‌ன்னா‌ல் உ‌ள்ள ச‌திகார‌ர்க‌ளி‌ல் ஒருவ‌ர் எ‌ன்று‌ம்,அவ‌ர்தா‌ன் மு‌ம்பை‌யி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்தசஹாபு‌தீ‌னி‌ற்கு வ‌ழிகா‌ட்டியவ‌ர் எ‌ன்று‌ம் அரசுவழ‌க்க‌றிஞ‌ர் உ‌‌ஜ்வா‌ல் ‌நிகா‌ம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல்தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்..

பாகிஸ்தானின் கடல்பகுதி தீவிர ரோந்தில் இருப்பதால் எந்ததீவிரவாதியும் பாகிஸ்தான் கடல் வழியாக இந்தியா செல்லவில்லை என்று பாகிஸ்தான் அறிவித்து உள்ளது!!!

இன்னும் சிறிது நாளில் பாகிஸ்தானுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று இந்தியாவே சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!