
சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!
எங்கிருந்தோ கமழும்
ஏதோ
ஒரு பூவின்
மணம்!
சாத்திய அறை
இருளில்
மின்னும்
உன் கண்கள்!
என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!
உள்ளும்
புறமும்
மாறி மாறி வீசும்
உன் வாசம்!!
என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!
உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!
சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!!
No comments:
Post a Comment