Thursday, January 15, 2009

உயிர்ப்பால்!!




இந்தியாவே இலங்கை என்ன
நீ கழற்றி வீசிய
காலணியா!
இல்லம் விட்டு
வெளியேற்றிய
வேண்டாத பிள்ளையா?
இரத்தம் கடலாகி
உன் பாதம்
தொடும்போது
நீ கண் விழித்து
என்ன பயன்!!!
அலைகடல் தாண்டி
அழும் ஓலம் கேட்கவில்லையா?
எழுந்திரு!!!
சுவாசிக்க மூச்சுகள்
முடியும்முன்!!
துடிக்க இதயங்கள்
மறக்கும் முன்!!!
உலர்ந்த அந்த
உயிர்களுக்கு
உன் சுவாசம் கொடு!
உன் குழந்தைகளை
அணைத்து
உயிர்ப்பால் ஊட்டு!!!!!!!

No comments:

Post a Comment