Thursday, December 18, 2008

கொஞ்சம் தேனீர்!!!

கண்ணீர்!!!!


உன் கண்களிலிருந்து வழியும்
கண்ணீர்த்துளிகளும் 
உன்
கன்னமேட்டைக்
கடந்தவுடன்
கவிதைகளாகின்றன!!
ஏனெனில் 
அவை அடுத்து விழுவது
உன் இதய மேடுகளில் தானே!!


தடங்கள்!!!


நடந்து வந்த பாதையைப்
பார்க்கிறேன்!
பல
காலடித்தடங்கள்!!!
உன்னுடயவை?
ஓ! அவை என் நெஞ்சில்!!!


காலை டீயுடன் லைட்டான
ரெண்டு கவிதையும்
சேர்த்துப்பருகுங்கள்!!!

தேவா....

No comments:

Post a Comment