Saturday, November 29, 2008

இலவச பணம்

நான் நேற்று ஊனமுற்றோருக்கு உதவித்தொகை வ்ழங்கும் முகாமுக்குச் சென்றிருந்தேன்(காரைக்குடி அருகில் கல்லல் என்ற ஊருக்கு). நிறய கூட்டம். ஊனமுற்றோரைப்பார்க்க மிகவும் க்ஷ்டமாகத்தான் இருந்தது. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்வது நம் கடமை. முகாம் நடுவில் ஒரு பையன் வந்தான்.யாரையோ கூட்டிக்கொண்டு வந்தான்.என்னன்னு கேட்டா அவனுக்கு ஊன சான்று கேட்டான்.சரி படிக்க யூஸ் ஆகும்தானே, ப்டிப்பு உதவித்தொகை வாங்கலாம்,கல்லூரில படிக்க உதவியா இருக்கும்னு சரிப்பான்னு போட்டுக்கொடுத்தேன். இப்ப்த்தான் ஜோக்கைக்கேளுங்கள். மருபடியும் வந்து இன்னொரு பாரம் கையெழுத்துப்போட்டுத்தாங்க என்றான்.யேன்டான்னு கேட்டா மாசாமாசம் 400 ரூபாய் உதவித்தொகை வேணும்கிறான்.நான் சொன்னேன்: ஊனம் கம்மியாத்தான் இருக்கு நீ படி,இல்ல லோன் வாங்கி தொழில் செய் என்றேன். அவன் கேக்கவே இல்லை,சிபாரிசுக்கு ஆளையெல்லாம் கூட்டி வந்தான். இதுபோல நிறய முகாம்ல நடக்குது. பசங்களுடய மனப்பான்யைபத்தி நீங்க என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே!!!!!!

No comments:

Post a Comment